search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்குதல்
    X
    மின்சாரம் தாக்குதல்

    திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

    திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி மீனா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 3-வது மகன் பால்பாண்டி (வயது 22). இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் இந்திரா காலனியில் உள்ள உறவினர் வீட்டில் பால்பாண்டி தங்கியிருந்தார்.

    நேற்று அவர் குளிப்பதற்காக வீட்டில் இருந்த மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பால்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×