என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி கோபித்துச்சென்றதால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்8 Jan 2021 11:10 AM GMT (Updated: 8 Jan 2021 11:10 AM GMT)
கோவையில் மனைவி கோபித்துச்சென்ற விரக்தியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை தெலுங்குபாளையம் சொக்கம்புதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 60). தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் பாலசுப்பிரமணியத்திற்கு 2 பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனை அவரது மனைவி கண்டித்து வாக்குவாதம் செய்து வந்தார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலசுப்பிரமணியத்தின் மனைவி கோபித்துக் கொண்டு ஈரோட்டில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மது குடித்து வந்த முதியவர் பாலசுப்பிரமணியம் நேற்று சீரநாயக்கன்பாளையம் நேதாஜி நகரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது முதியவர் பாலசுப்பிரமணியத்திற்கு 2 பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு சென்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் கூறினர்.
கோவை தெலுங்குபாளையம் சொக்கம்புதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 60). தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் பாலசுப்பிரமணியத்திற்கு 2 பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனை அவரது மனைவி கண்டித்து வாக்குவாதம் செய்து வந்தார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலசுப்பிரமணியத்தின் மனைவி கோபித்துக் கொண்டு ஈரோட்டில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மது குடித்து வந்த முதியவர் பாலசுப்பிரமணியம் நேற்று சீரநாயக்கன்பாளையம் நேதாஜி நகரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது முதியவர் பாலசுப்பிரமணியத்திற்கு 2 பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு சென்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X