search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை திருட்டு
    X
    நகை திருட்டு

    மூதாட்டியிடம் 14 பவுன் தங்க சங்கிலி பறிப்பு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

    தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 14 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி செல்வீஜர் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மனைவி ரதிமணி (வயது 73). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே உள்ள பேக்கரி கடைக்கு சென்று விட்டு டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் நடந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 மர்மநபர்கள் திடீரென ரதிமணி கழுத்தில் கிடந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 14 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது, தங்க சங்கிலியை பறித்து சென்றவர்கள், வடமாநில வாலிபர்கள் என்பது தெரியவந்து உள்ளது. இதே போன்று பல மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது. இதனால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
    Next Story
    ×