என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூதாட்டியிடம் 14 பவுன் தங்க சங்கிலி பறிப்பு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Byமாலை மலர்8 Jan 2021 10:04 AM GMT (Updated: 8 Jan 2021 10:04 AM GMT)
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 14 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி செல்வீஜர் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மனைவி ரதிமணி (வயது 73). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே உள்ள பேக்கரி கடைக்கு சென்று விட்டு டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் நடந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 மர்மநபர்கள் திடீரென ரதிமணி கழுத்தில் கிடந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 14 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்க சங்கிலியை பறித்து சென்றவர்கள், வடமாநில வாலிபர்கள் என்பது தெரியவந்து உள்ளது. இதே போன்று பல மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது. இதனால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
தூத்துக்குடி செல்வீஜர் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மனைவி ரதிமணி (வயது 73). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே உள்ள பேக்கரி கடைக்கு சென்று விட்டு டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் நடந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 மர்மநபர்கள் திடீரென ரதிமணி கழுத்தில் கிடந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 14 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்க சங்கிலியை பறித்து சென்றவர்கள், வடமாநில வாலிபர்கள் என்பது தெரியவந்து உள்ளது. இதே போன்று பல மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது. இதனால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X