என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய திட்டம் தேவையில்லை- 8 வழி சாலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
Byமாலை மலர்8 Jan 2021 9:23 AM GMT (Updated: 8 Jan 2021 9:23 AM GMT)
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சேலம்-சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை சேர்ந்த யுவராஜ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து, வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய திட்டம் தேவையில்லை என்றும், ஏற்கனவே உள்ள 3 நெடுஞ்சாலைகளில் ஒன்றை விரிவாக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது, சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X