search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன்
    X
    மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன்

    இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு- மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன்

    மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறினார்.
    சென்னை:

    நாடு முழுவதும் 2ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கிய நிலையில் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடக்கும் ஒத்திகையை ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் வாழ்த்து தெரிவித்தார்.

    * கொரோனா பரவ தொடங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்பு பணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது.

    * மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு.

    * இந்தியாவில் 2,300 மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    * தடுப்பூசி கண்டுபிடிக்க மட்டுமின்றி, அதனை உரிய முறையில் செலுத்தவும் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    * ஜனவரி 17ந்தேதி போலியோ தடுப்பூசி போடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×