என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான போலீஸ்காரருக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன்
Byமாலை மலர்8 Jan 2021 1:47 AM GMT (Updated: 8 Jan 2021 1:47 AM GMT)
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான போலீஸ்காரருக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலர் ஏற்கனவே தங்களுக்கு ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தநிலையில் போலீஸ்காரர் தாமஸ்பிரான்சிஸ் மீண்டும் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், “என்னுடைய சகோதரருக்கு திருமணம் நடக்க உள்ளது. எனவே இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார், முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், வருகிற 10-ந்தேதி தேதி பகல் 11 மணி முதல் 12-ந்தேதி மாலை 5 மணி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X