search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    தொழிற்சாலையில் தவறி விழுந்த தொழிலாளி பலி

    தொழிற்சாலையில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்லடம்:

    ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜத்ஓராண் மகன் லலித்ஓரான், (வயது39). இவர் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிற்சாலையில் 6 அடி உயரமுள்ள எந்திரத்தில் நின்று சுத்தம் செய்யும் வேலை பார்க்கும் போது கால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் வழிந்த நிலையில் உடன் பணிபுரியும் தொழிலாளர்கள் இவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×