என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
Byமாலை மலர்6 Jan 2021 8:23 AM GMT (Updated: 6 Jan 2021 8:23 AM GMT)
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கீழ்மணம்பேடு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி கஸ்தூரி (வயது 65). நேற்று முன்தினம் கஸ்தூரி தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி கொண்டு மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அவர் கீழ்மணம்பேடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஒன்று கஸ்தூரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கஸ்தூரி பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X