search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

    நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஒட்டப்பட்டி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 44). இவர் சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சரளா, காரிமங்கலம் அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கடந்த 4-ந் தேதி தங்களது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான பென்னாகரம் அடுத்த ராஜாவூர் பகுதிக்கு சென்றிருந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த சுமார் 12 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஆசிரியர் அருள் கொடுத்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×