என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்6 Jan 2021 7:50 AM GMT (Updated: 6 Jan 2021 7:50 AM GMT)
நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஒட்டப்பட்டி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 44). இவர் சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சரளா, காரிமங்கலம் அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கடந்த 4-ந் தேதி தங்களது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான பென்னாகரம் அடுத்த ராஜாவூர் பகுதிக்கு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த சுமார் 12 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஆசிரியர் அருள் கொடுத்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X