என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆன்லைன் கடன் செயலிகள் கடனை வசூலிக்கும் முறை சரியல்ல -நீதிபதிகள் கண்டனம்
Byமாலை மலர்6 Jan 2021 7:03 AM GMT (Updated: 6 Jan 2021 7:03 AM GMT)
கடனை வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மதுரை:
ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, செயலிகள் மூலம் ஆன்லைனில் கடன் பெற்று தற்கொலை செய்வது இந்தியாவின் முக்கிய பிரச்சனையாக உள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
நீதிபதிகள் மேலும் கூறியதாவது:-
கடனை வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க முடியாது. கடன் செயலிகள் மூலம் கடனை வசூலிப்பதற்காக அங்கீகரிக்க முடியாத முறையை பின்பற்றுகின்றனர். கடனை வசூலிக்கும் முறைகள் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதில்லை.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய நிதித்துறை செயலாளர், ரிசர்வ் வங்கி மற்றும் கூகுள் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X