search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மன்னார்குடியில் கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.25 ஆயிரம்- செல்போன்கள், லேப்டாப் திருட்டு

    மன்னார்குடியில் கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.25 ஆயிரம் மற்றும் செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பராங்குசம் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 50). இவர் மன்னார்குடி பழைய பஸ் நிறுத்தம் அருகில் செல்போன் கடை வைத்துள்ளார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு முரளி திருப்பதிக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை ஊருக்கு திரும்பிய அவர் கடையை திறந்துள்ளார். அப்போது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது மேஜை அறையில் இருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள் , ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள 2 லேப்டாப்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் முரளி புகார் கொடுத்தார். அதன்பேரில் மன்னார்குடி போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து பணம், செல்போன்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
    Next Story
    ×