என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே வெட்டாற்றில் மணல் அள்ளிய 5 பேர் கைது
Byமாலை மலர்4 Jan 2021 12:26 PM GMT (Updated: 4 Jan 2021 12:26 PM GMT)
தஞ்சை அருகே வெட்டாற்றில் மணல் அள்ளிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் உத்தரவிட்டார். அதன்படி ஆற்றுப்படுகைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு அனுமதியின்றி மணல் அள்ளியவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இதே போல் தஞ்சை அருகே வெண்ணாறு, வெட்டாறு பகுதிகளிலும் மணல் திருட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தஞ்சை அருகே வயலூர் வெட்டாற்றில் சிலர் மணல் திருடுவதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் வயலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 5 மாட்டு வண்டிகளை வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த சந்திரகாசன் (வயது49), குமார் (40), குருமூர்த்தி(45). சிவக்குமார் (42),வெங்கடாச்சலம் (40) ஆகியோர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 5 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X