search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருச்சி அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் தீவிபத்தில் பலி

    திருச்சி அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் தீ விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி பெரிய மிளகுபாறை புதுத்தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 65). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் சமையல் செய்வதற்கு உதவி செய்து வந்தார். 

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த ஆடையில் தீ பிடித்து எரிந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×