என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே மருந்துகடையில் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்4 Jan 2021 10:56 AM GMT (Updated: 4 Jan 2021 10:56 AM GMT)
ராமநாதபுரம் அருகே மருந்துகடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் வசந்தநகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது51) . இவர் வசந்தநகர் பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடையில் கல்லாவை மட்டும் பூட்டிவிட்டு அருகில் ஒருவரை பார்க்க சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட 2 நபர்கள் கடைக்குள் புகுந்து கல்லாவை உடைத்து அதில் இருந்த ரூ.ஆயிரத்து 100 ஐ திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அப்போது வெளியில் சென்றிருந்த பாண்டியம்மாள் திரும்பி வந்துள்ளார். கடைக்குள் இருந்து வெளியில் வந்தவர்களை பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து தப்பி ஓடிய நபர் கல்தடுக்கி கீழே விழுந்து காயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பிஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது பிடிபட்ட நபர் வடக்குத்தெருவை சேர்ந்த குமரன் மகன் ராகுல் (20) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து பணத்தை கைப்பற்றிய போலீசார் ராகுலை கைது செய்தனர். தப்பி ஓடிய ராஜாவை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X