search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்
    X
    தேமுதிக தலைவர் விஜயகாந்த்

    மதுரையில் தே.மு.தி.க.வினர் கைது- விஜயகாந்த் கண்டனம்

    மதுரையில் தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது ஜெயந்திவிழாவுக்கு சென்ற தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷை வரவேற்க காத்திருந்த தேனி மாவட்ட செயலாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தே.மு.தி.க.வினரை மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.

    அரசியல் தலைவர்களுக்கு அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பது வழக்கமான ஒன்று. உரிய அனுமதி பெற்றும், விதிமுறைகளை கடைப்பிடித்தும் வரவேற்பு அளிக்க காத்திருந்த நிர்வாகிகளை போலீசார் கைது செய்தது அராஜக செயல். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×