search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவை மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா தொற்று - 52,496 பேர் குணமடைந்தனர்

    கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையை சேர்ந்த 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப் பட்ட பட்டியலில் கோவையை சேர்ந்த 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 496 ஆக உயர்ந்து உள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 97 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரையில் 51 ஆயிரத்து 63 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 779 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கோவையில் கடந்த மே மாதம் தொடங்கி கடந்த மாதம் 27-ந் தேதி வரை 645 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் ஆண்கள் 476 பேரும், பெண்கள் 169 பேரும் அடங்கும். பெண்களை விட கூடுதலாக 307 ஆண்கள் உயிரிழந்து உள்ளனர். கெரோனா தொற்றுக்கு மே மாதத்தில் ஒருவரும், ஜூன் மாதத்தில் உயிரிழப்பு இல்லை, ஜூலையில் 53 பேரும், ஆகஸ்ட்டில் 254 பேரும், செப்டம்பர் மாதத்தில் 128 பேரும், அக்டோபரில் 122 பேரும், நவம்பர் மாதத்தில் 55 பேரும், கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி வரை 32 பேரும் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதில் ஆகஸ்டு மாதத்தில்தான் அதிகபட்சமாக 254 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    Next Story
    ×