என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Byமாலை மலர்3 Jan 2021 1:09 PM GMT (Updated: 3 Jan 2021 1:09 PM GMT)
குளித்தலை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து மருங்காபுரிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் குளித்தலை - மணப்பாறை சாலையில் குளித்தலை அருகேயுள்ள மேலமைலாடி பஸ் நிறுத்தம் உள்ள பகுதி வழியாகச் செல்லும் இந்த குடிநீர் குழாயில் சிறிய அளவிலான உடைப்பு ஏற்பட்டுள்ளது. மண்ணில் புதைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் கசிந்து சாலையோரமாக சென்று கொண்டிருக்கிறது. பல நாட்களாக தண்ணீர் கசிந்து செல்வதால் குடிநீர் வீணாகிவருகிறது.
இந்த குடிநீர் குழாயில் தற்போது சிறிய அளவில் ஏற்பட்டுள்ள கசிவு, நாளடைவில் அதிகப்படியாக வாய்ப்புள்ளது. அப்படி ஏற்பட்டால் அதிகப்படியான தண்ணீர் வீணாவதோடு, மற்ற பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் உடனடியாக இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X