search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வாடிப்பட்டி அருகே குடிபோதையில் தகராறு- வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

    வாடிப்பட்டி அருகே வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    வாடிப்பட்டி அருகே உள்ள வாவிடமருதூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 34) . சம்பவத்தன்று இவர் கூடல்புதூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் குடிபோதையில் அவதூறாக பேசி கொண்டிருந்தனர். அதனை சங்கர், தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேர் அவரை கற்களை வீசி தாக்கினார். இதில் காயம் அடைந்த சங்கர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகர்(வயது 46), யுவராஜ்(30), ரவி(48) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×