search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் குவிந்த சுற்றுலா பயணிகள்

    கொடைக்கானலில் தொடர் விடுமுறையையொட்டி அதிக அளவு சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து வார விடுமுறையை கொண்டாட மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு உள்ளது. இருந்தபோதும் சுற்றுலா பணயிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை சாரல் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளைக்குகளை எரிய விட்டு சென்றனர். மழையில் நனைந்தவாறு சுற்றுலா பயணிகள் ஏறிச்சாலையை சுற்றி வந்தனர்.

    12 மைல் சுற்றுலா தலங்களான குணாகுகை, பசுமை பள்ளதாக்கு, மோயர்சதுக்கம், தூண்பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்க‌ளுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்தனர். வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிப்பதையும், மேனிகளில் தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்களையும், இதமான சூழ்நிலையையும் ரசித்தனர்.

    அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஏரிச்சாலை, அப்ச‌ர்வேட்ட‌ரி, கலைய ரங்கம், 7 ரோடு சந்திப்பு சுற்றுலா தலங்கள் செல்லும் சாலை உள்ளிட்ட‌ பல்வேறு இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    ஆங்காங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறை நாட்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை பணியில் நியமனம் செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×