search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    மதுரவாயல் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

    பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    மதுரவாயல் பல்லவன் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 31). இவர், தனது மனைவி சசிரேகா மற்றும் 6 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வீட்டின் அருகே சென்றபோது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் சசிரேகாவின் கழுத்தில் அணிந்து இருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுபற்றி மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×