search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவை அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது

    கோவை அருகே செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை புலியகுளம் பெரியார்நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது21). இவர் சவுரிபாளையம் ரோட்டில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம ஆசாமி மாரிமுத்துவின் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடினார். உடனே அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம ஆசாமியை பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் மதுரை மேலூர் சந்தைபேட்டையை சேர்ந்த நந்தகுமார் (20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×