search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    1 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

    அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இதுவரை 1 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்: 

    அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களில் 2 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும் என  நேற்று மொத்தம் 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 637 ஆக  உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 48 பேர் உயிரிழந்துள்ளனர். 

    மாவட்டத்தில் மொத்தம் 4,554 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 35 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் 215 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 371 பேருக்கு கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

     பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே 2,257 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 21 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2, 234 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 2 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று  வருகிறார்கள். மேலும் 178 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 68 ஆயிரத்து 598 பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சேர்த்து இதுவரை 1 லட்சத்து 68 ஆயிரத்து 969 பேருக்கு பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×