என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் பம்பர்கள் பொருத்தப்பட்ட 22 வாகனங்களுக்கு அபராதம்
Byமாலை மலர்2 Jan 2021 10:18 AM GMT (Updated: 2 Jan 2021 10:18 AM GMT)
சேலத்தில் பம்பர்கள் பொருத்தப்பட்ட 22 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்:
கார், மோட்டார் சைக்கிள்களின் முன்புறம் பம்பர்கள் பொருத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறி பம்பர்கள் பொருத்தி வரும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ராஜராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சேலத்தில் வாகன சோதனை செய்து பம்பர்கள் பொருத்தி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ராஜராஜன் கூறும் போது, ‘தற்போது தயாரிக்கப்படும் கார்களில் காற்றுப்பை (ஏர்பேக்) அமைக்கப்படுகிறது. பெரிய அளவிலான பம்பர்கள் பொருத்தப்பட்ட கார்கள் விபத்தில் சிக்கும்போது காற்றுப்பை விரியாது. அப்போது காரில் உள்ளவர்களுக்கு பலத்த காயம் ஏற்படும். சில நேரங்களில் உயிர் இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கார் உள்ளிட்ட வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும். தற்போது வரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் பம்பர்கள் பொருத்தப்பட்ட 22 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X