search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
    X
    கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    தென்னிலை அருகே கார் மோதி மூதாட்டி பலி

    தென்னிலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    க.பரமத்தி:

    கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள நல்லிபாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 70). இவர் நேற்று காலை அவருடைய வீட்டில் இருந்து நல்லிபாளையம் பிரிவு என்ற இடத்தில் கரூர்- கோவை சாலையை கடக்கும் போது திருப்பூரில் இருந்து தஞ்சாவூரை நோக்கி வந்த கார் சரஸ்வதி மீது மோதி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சரஸ்வதி உயிரிழந்தார். மேலும் காரில் வந்த 8 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

    இதையடுத்து போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த விபத்து குறித்து தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், காரை ஓட்டி வந்தது திருப்பூர் மாவட்டம், காந்திபுரம், ராத்திமா நகரை சேர்ந்த பீர்முகமது (32) என்பதும், காரில் 3 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் வந்ததும் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×