என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்னிலை அருகே கார் மோதி மூதாட்டி பலி
Byமாலை மலர்1 Jan 2021 1:29 PM GMT (Updated: 1 Jan 2021 1:29 PM GMT)
தென்னிலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
க.பரமத்தி:
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள நல்லிபாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 70). இவர் நேற்று காலை அவருடைய வீட்டில் இருந்து நல்லிபாளையம் பிரிவு என்ற இடத்தில் கரூர்- கோவை சாலையை கடக்கும் போது திருப்பூரில் இருந்து தஞ்சாவூரை நோக்கி வந்த கார் சரஸ்வதி மீது மோதி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சரஸ்வதி உயிரிழந்தார். மேலும் காரில் வந்த 8 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
இதையடுத்து போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், காரை ஓட்டி வந்தது திருப்பூர் மாவட்டம், காந்திபுரம், ராத்திமா நகரை சேர்ந்த பீர்முகமது (32) என்பதும், காரில் 3 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் வந்ததும் தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X