என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Byமாலை மலர்1 Jan 2021 12:56 PM GMT (Updated: 1 Jan 2021 12:56 PM GMT)
ஓமலூர் போலீஸ் நிலையத்தில் 2-வதாக திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி கரினல்பட்டி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 21). இவர் டிப்ளமோ படித்துவிட்டு அழகுநிலையம் நடத்தி வருகிறார். இவரும், முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகள் திலகவதி (19) என்பவரும் முகநூலில் அறிமுகம் ஆகி உள்ளனர். பின்னர் பார்க்காமலேயே ஒரு வருடம் காதலித்து வந்து உள்ளனர். தொடர்ந்து முகவரியை கேட்டு தெரிந்தபின் ஒரே ஊராட்சியில் வசித்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு வீட்டை விட்டு சென்று காதல்ஜோடி திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து திலகவதியின் பெற்றோர் தங்களது மகளை கடத்தி சென்றுவிட்டதாக ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதன்பேரில் அப்போது திலகவதி மைனர் பெண் என்பதால், தினேஷ்குமார் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த தினேஷ்குமார், திலகவதிக்கு திருமண வயது வந்ததும், அவரை அழைத்துச்சென்று 2-வது முறையாக திருமணம் செய்துகொண்டு ஓமலூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி திலகவதியை, அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X