search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தர்மபுரி மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    தர்மபுரி மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டல்பட்டி பகுதியில் சாலையில் தனியாக சென்றவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 33), சூர்யா என்கிற உதயசூரியன் (21), திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த மதியழகன் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். 

    அப்போது திருச்சி, மதுரை, தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த 3 பேரும் வழிப்பறி, திருட்டுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கார்த்திகா உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவு நகல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×