search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தாண்டு
    X
    புத்தாண்டு

    சென்னை நட்சத்திர ஓட்டல்களில் பகலில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள்

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று இரவு 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பகல் நேர புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
    சென்னை:

    கொரோனா பரவலால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று இரவு 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புகள் மற்றும் பண்ணை வீடுகளில் இன்று பகலில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இன்று மதியம் 12.30 மணிக்கு மேல் சென்னையில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான டிக்கெட்டுகளை பொதுமக்களும், இளைஞர்களும் போட்டி போட்டு வாங்கி இருந்தனர். அந்த டிக்கெட்டில், ‘இரவு 9.30 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட வேண்டும்’ என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பகல்நேர புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர். குடும்பத்தோடும் பலர் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×