search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலாயுதம்பாளையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

    வேலாயுதம்பாளையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நொய்யல்:

    வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தவுட்டுப்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற கட்டிபாளையத்தை சேர்ந்த வீரமணி (வயது 45) என்பவரை பிடித்து கைது செய்ததனர். பின்னர் அவரிடமிருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும், ரூ500-ஐயும்பறிமுதல் செய்தனர். அதேபோல் பாலத்துறை விநாயகர் கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற காதப்பாறை காந்தி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்து பல்வேறு மாநில லாட்டரி சீட்டுகளையும் ரூ500-ஐயும் பறிமுதல் செய்து கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×