என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமுகை அருகே ரேஷன் கடையின் ஜன்னலை உடைத்து காட்டு யானை அட்டகாசம்
Byமாலை மலர்30 Dec 2020 9:14 AM GMT (Updated: 30 Dec 2020 9:14 AM GMT)
சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவையை அடுத்த சிறுமுகை சத்தி மெயின் ரோடு சம்பரவள்ளிபுதூரில் பெத்திக்குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பகுதிநேர ரேஷன் கடை உள்ளது. இங்கு 450-க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர்.
இந்த ரேஷன் கடையின் அருகே நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை, ரேஷன் கடையின் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து தூக்கி வீசியது. பின்னர் அந்த யானை துதிக்கையை ரேஷன் கடைக்குள் விட்டு அரிசி உள்ளிட்ட பொருட்களை தேடியது. ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த யானை, ரேஷன் கடையை சிறிது நேரம் சுற்றி சுற்றி வந்தது. இதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து கூச்சலிட்டு காட்டு யானையை விரட்டினார்கள். இது குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகின்றனர். எனவே காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்றனர்.
கோவையை அடுத்த சிறுமுகை சத்தி மெயின் ரோடு சம்பரவள்ளிபுதூரில் பெத்திக்குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பகுதிநேர ரேஷன் கடை உள்ளது. இங்கு 450-க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர்.
இந்த ரேஷன் கடையின் அருகே நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை, ரேஷன் கடையின் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து தூக்கி வீசியது. பின்னர் அந்த யானை துதிக்கையை ரேஷன் கடைக்குள் விட்டு அரிசி உள்ளிட்ட பொருட்களை தேடியது. ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த யானை, ரேஷன் கடையை சிறிது நேரம் சுற்றி சுற்றி வந்தது. இதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து கூச்சலிட்டு காட்டு யானையை விரட்டினார்கள். இது குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகின்றனர். எனவே காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X