search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் அரிசி பறிமுதல்
    X
    ரேஷன் அரிசி பறிமுதல்

    உக்கடத்தில் வீட்டில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    உக்கடத்தில் வீட்டில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே சலைன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக பெரிய கடை வீதி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனையிட்ட போது வீட்டுக்குள் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

    உடனே பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தூயமணி, சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா மற்றும் போலீசார் நேற்று இரவு அந்த வீட்டில் சோதனை நடத்தி அங்கு 43 மூட்டைகளில் இருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து ரேஷன் அரிசி பதுக்கிய முகமது, முப்தார், மணி ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×