search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பெரியாம்பட்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    பெரியாம்பட்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு விவேக் நகர் பகுதியை சேர்ந்தவர் பின்டேபெலிக்ஸ் (வயது 25). அதேபகுதியை சேர்ந்தவர் சிமியோன் (22). நண்பர்களான இவர்கள் 2 பேரும் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பின்டேபெலிக்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிமியோன் லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த பின்டேபெலிக்சின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×