search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 28-ந்தேதி (இன்று) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதேபோல், 29 (நாளை), 30 (நாளை மறுதினம்) -ந்தேதிகளில் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    31-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×