search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோவில்பட்டி அருகே கார் மோதி தொழிலாளி பலி

    கோவில்பட்டி அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியை அடுத்த இனாம் மணியாச்சியை சேர்ந்தவர் சமுத்திரப்பாண்டியன் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையம் அருகே நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற கார் சமுத்திரப்பாண்டியன் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த ராமநாதனிடம் (57) விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×