search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    பிரிட்டனில் இருந்து வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று- அமைச்சர் விஜயபாஸ்கர்

    பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு விமானம், ரெயில் போக்குவரத்துகளை பல நாடுகளும் துண்டித்து உள்ளன.

    இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை 5, தஞ்சை 3, நீலகிரி 2, தேனி, மதுரை, செங்கல்பட்டை சேர்ந்த தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 

    பிரிட்டனில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 120 தனிப்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
    Next Story
    ×