search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு சம்பவம் நடைபெற்ற மோகனின் வீட்டை படத்தில் காணலாம்.
    X
    திருட்டு சம்பவம் நடைபெற்ற மோகனின் வீட்டை படத்தில் காணலாம்.

    கோவில்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

    கோவில்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சரவணம்பட்டி:

    கோவை கோவில்பாளையம் காபி கடை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மோகன் (வயது56). இவருடைய மனைவி கவுசல்யா. தனியார் நிறுவன ஊழியர். இவர்களுடைய மகள் சூர்யபிரபா. இவர், தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் சேரன் மாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மோகனை தங்கியிருந்து சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனால் சூர்யபிரபாவும் அவரது கணவர் லோகநாதனும் வீட்டிற்கு வந்து தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் நேற்று காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த வைரம் மற்றும் பிளாட்டின மோதிரம், 20 பவுன் தங்க நகையும், ரூ.2 லட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    இது குறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×