search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமியை திருமணம் செய்த கட்டிட மேஸ்திரி கைது

    தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள ஆராரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காசி. இவருடைய மகன் அன்பு (வயது 25). கட்டிட மேஸ்திரி. இவர் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். 

    திருமணத்திற்கு பின்பு கர்ப்பமான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி 9 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. 

    இதுதொடர்பாக டாக்டர்கள், குழந்தை நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த கட்டிட மேஸ்திரி அன்புவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    Next Story
    ×