என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமியை திருமணம் செய்த கட்டிட மேஸ்திரி கைது
Byமாலை மலர்24 Dec 2020 8:13 AM GMT (Updated: 24 Dec 2020 8:13 AM GMT)
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள ஆராரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காசி. இவருடைய மகன் அன்பு (வயது 25). கட்டிட மேஸ்திரி. இவர் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு கர்ப்பமான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி 9 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக டாக்டர்கள், குழந்தை நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த கட்டிட மேஸ்திரி அன்புவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X