என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்- உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
Byமாலை மலர்24 Dec 2020 1:37 AM GMT (Updated: 24 Dec 2020 1:37 AM GMT)
27-ந் தேதி முதல் நடக்க இருந்த லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.
சென்னை:
பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது, வேகக்கட்டுப்பாட்டு கருவி வாங்குவதில் உள்ள சில பிரச்சினைகள் மற்றும் டீசல் வரியை குறைக்க வேண்டும், கொரோனா காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட சாலை வரியை நீக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தனர்.
இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் சங்கங்களுடன் போக்குவரத்து துறை ஆணையர் தென்காசி ஜவஹர் சென்னை கே.கே.நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிளி, பொருளாளர் தன்ராஜ், தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர், துணைத்தலைவர் ராஜூ, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் உள்பட பலர் சென்றிருந்தனர். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 3 மணி வரை நடந்தது.
சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், நிதி சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து அரசிடம் பரிசீலித்து தெரிவிப்பதாகவும் போக்குவரத்து துறை ஆணையர் உறுதி அளித்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து வருகிற 27-ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவிட்டு வெளியே வந்த அனைத்து லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றார்.
பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது, வேகக்கட்டுப்பாட்டு கருவி வாங்குவதில் உள்ள சில பிரச்சினைகள் மற்றும் டீசல் வரியை குறைக்க வேண்டும், கொரோனா காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட சாலை வரியை நீக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தனர்.
இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் சங்கங்களுடன் போக்குவரத்து துறை ஆணையர் தென்காசி ஜவஹர் சென்னை கே.கே.நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிளி, பொருளாளர் தன்ராஜ், தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர், துணைத்தலைவர் ராஜூ, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் உள்பட பலர் சென்றிருந்தனர். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 3 மணி வரை நடந்தது.
சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், நிதி சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து அரசிடம் பரிசீலித்து தெரிவிப்பதாகவும் போக்குவரத்து துறை ஆணையர் உறுதி அளித்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து வருகிற 27-ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவிட்டு வெளியே வந்த அனைத்து லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X