search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருள்- மதுபாட்டில்கள் பதுக்கிய 77 பேர் கைது

    நெல்லையில் புகையிலை பொருள், மதுபாட்டில்கள் பதுக்கிய 77 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நெல்லை மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கஞ்சா, புகையிலை பொருட்கள், மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு விடிய விடிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை பதுக்கிய 31 பேர் மீதும், கஞ்சா பதுக்கிய 2 பேர் மீதும், மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கிய 44 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 241 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
    Next Story
    ×