search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விவசாயியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

    பூதலூர் அருகே விவசாயியிடம் பணம் பறித்தது தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூர் பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது40). விவசாயி. இவர் பூதலூர் அருகே உள்ள முனிஆண்டவர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 பேர் ராமுவை மிரட்டி சட்டை பையில் வைத்து இருந்த ரூ.200-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமுவிடம் பணம் பறித்தது புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவடிவேல்(வயது42), தஞ்சை அருகே உள்ள கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (42) என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×