என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி
Byமாலை மலர்23 Dec 2020 9:25 AM GMT (Updated: 23 Dec 2020 9:25 AM GMT)
லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
திருமங்கலத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 45) . இவர் முகநூலில், வெளிநாட்டு லாட்டரி நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து, அவரது பெயரை விளையாட்டாக பதிவு செய்துள்ளார். சில தினங்களுக்கு பிறகு, லாட்டரி நிறுவனத்தில் இருந்து சுப்புலட்சுமிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் அவருக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகவும், பரிசுத் தொகை பெறுவதற்கு வரி கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதை நம்பிய சுப்புலட்சுமி அந்த நபர் தெரிவித்த 7 வங்கி கணக்குகளில் ரூ.27 லட்சத்தை செலுத்தி உள்ளார். ஆனால் நீண்ட நாளாகியும் லாட்டரி நிறுவனம் அவருக்கு பரிசுத் தொகையை கொடுக்கவில்லை. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்புலட்சுமி, மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 45) . இவர் முகநூலில், வெளிநாட்டு லாட்டரி நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து, அவரது பெயரை விளையாட்டாக பதிவு செய்துள்ளார். சில தினங்களுக்கு பிறகு, லாட்டரி நிறுவனத்தில் இருந்து சுப்புலட்சுமிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் அவருக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகவும், பரிசுத் தொகை பெறுவதற்கு வரி கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதை நம்பிய சுப்புலட்சுமி அந்த நபர் தெரிவித்த 7 வங்கி கணக்குகளில் ரூ.27 லட்சத்தை செலுத்தி உள்ளார். ஆனால் நீண்ட நாளாகியும் லாட்டரி நிறுவனம் அவருக்கு பரிசுத் தொகையை கொடுக்கவில்லை. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்புலட்சுமி, மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X