search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கரூர் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் டயர்கள் திருட்டு

    கரூர் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் டயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள சுக்காலியூர் பழைய செக்போஸ்ட் பகுதியில் டயர் கடை நடத்தி வருபவர் ராஜ்குமார் (வயது 29). இவர், வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கார் டயர்கள், 28 இரு சக்கர வாகன டயர்கள், 2 ஆட்டோ டயர்கள் மற்றும் டிராக்டர், லாரி டயர்கள் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 72 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து, தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×