என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் டயர்கள் திருட்டு
Byமாலை மலர்22 Dec 2020 9:43 AM GMT (Updated: 22 Dec 2020 9:43 AM GMT)
கரூர் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் டயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்:
கரூர் அருகே உள்ள சுக்காலியூர் பழைய செக்போஸ்ட் பகுதியில் டயர் கடை நடத்தி வருபவர் ராஜ்குமார் (வயது 29). இவர், வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கார் டயர்கள், 28 இரு சக்கர வாகன டயர்கள், 2 ஆட்டோ டயர்கள் மற்றும் டிராக்டர், லாரி டயர்கள் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 72 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர் அருகே உள்ள சுக்காலியூர் பழைய செக்போஸ்ட் பகுதியில் டயர் கடை நடத்தி வருபவர் ராஜ்குமார் (வயது 29). இவர், வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கார் டயர்கள், 28 இரு சக்கர வாகன டயர்கள், 2 ஆட்டோ டயர்கள் மற்றும் டிராக்டர், லாரி டயர்கள் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 72 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X