search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஸ்ரீவைகுண்டம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

    ஸ்ரீவைகுண்டம் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி வாலிபர் பலியானார்.
    ஸ்ரீவைகுண்டம்:

    நெல்லை பாளையங்கோட்டை நயினார் தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ் மகன் பீர் ஷேக் அரபாத் (வயது23). இவர் நெல்லையில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது நண்பர்களுடன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இலுப்பைக்குளத்திற்கு வந்தார். அப்போது அவர்கள் அனைவரும் வெட்டிகுளம் ரோட்டின் அருகே உள்ள ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். ஆனால் பீர் ஷேக் அரபாத் நீச்சல் தெரியாத நிலையில் கிணற்றில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென்று கிணற்றில் மூழ்கினார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கிணற்றில் தேடினார்கள். ஆனால் முடியவில்லை.

    இதுகுறிந்து உடனடியாக சேரகுளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிய பீர்ஷேக் அரபாத்தை பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×