என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் அதிமுக, திமுக கோரிக்கை
Byமாலை மலர்21 Dec 2020 7:59 PM GMT (Updated: 22 Dec 2020 12:49 AM GMT)
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தவிர மற்ற அரசியல் கட்சிகள் தமிழகம் வந்துள்ள தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவிடம் கோரிக்கை விடுத்து உள்ளன.
சென்னை:
அதற்காக இந்திய தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில், தேர்தல் துணை ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஸ் குந்ரா, பீகார் தலைமைத் தேர்தல் அதிகாரி ஸ்ரீநிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஞ் ஸ்ரீவத்சவா, செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.
கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் அவர்கள் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் வரும் ஏப்ரல் மாதம் 3–வது அல்லது 4–வது வாரத்தில் முன்கூட்டியே ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இதேபோல், தி.மு.க. சார்பில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். புதிய வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பது குறித்து அளிக்கப்பட்டு மனு மீது நடவடிக்கை எடுத்து சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசியல் கட்சியினருடனான சந்திப்பிற்கு பிறகு உயர்மட்டக்குழுவினர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் இணைந்து கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், முதல் கட்டமாக இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழு சென்னை வந்து ஆய்வு மேற்கொள்கிறது.
அதற்காக இந்திய தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில், தேர்தல் துணை ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஸ் குந்ரா, பீகார் தலைமைத் தேர்தல் அதிகாரி ஸ்ரீநிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஞ் ஸ்ரீவத்சவா, செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.
கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் அவர்கள் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் வரும் ஏப்ரல் மாதம் 3–வது அல்லது 4–வது வாரத்தில் முன்கூட்டியே ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இதேபோல், தி.மு.க. சார்பில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். புதிய வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பது குறித்து அளிக்கப்பட்டு மனு மீது நடவடிக்கை எடுத்து சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசியல் கட்சியினருடனான சந்திப்பிற்கு பிறகு உயர்மட்டக்குழுவினர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் இணைந்து கூட்டம் நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X