என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டையில் நகை வியாபாரி- மனைவிக்கு கத்திக்குத்து
Byமாலை மலர்21 Dec 2020 3:06 PM GMT (Updated: 21 Dec 2020 3:06 PM GMT)
ராணிப்பேட்டையில் நகை வியாபாரி மற்றும் அவரது மனைவியை கத்தியால் குத்திய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை ஜவுளிக்கடை தெருவை சேர்ந்தவர் சம்பாலால் (வயது 72). நகை வியாபாரி. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு கதவை ஒருவர் தட்டியுள்ளார். சம்பாலாலின் மனைவி பார்வதிபாய் (70) சென்று கதவை திறந்துள்ளார். அப்போது அந்த நபர் உங்கள் மகன் எங்கே என்று கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார். பார்வதி பாய் தடுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பார்வதிபாயின் கழுத்தில் குத்தி உள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு பார்வதியின் கணவர் சம்பாலால் வந்துள்ளார், அவரையும் அந்த மர்ம நபர் கழுத்தில, கத்தியால் குத்தியுள்ளார்.
இதற்குள் வீட்டிலிருந்து அவரது மருமகள் வரவே, மர்ம நபர் தப்பி ஓடிவிட்டான். காயமடைந்த சம்பாலால், அவரது மனைவி பார்வதி பாய் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X