என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாசரேத்தில் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்21 Dec 2020 2:32 PM GMT (Updated: 21 Dec 2020 2:32 PM GMT)
நாசரேத்தில் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாசரேத்:
நாசரேத் வாழையடி பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக, நாசரேத் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவில் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கேசுவரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 37 மூட்டைகளில் மொத்தம் 520 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.
போலீசாரின் விசாரணையில், நாசரேத் மோசஸ் தெருவைச் சேர்ந்த சுயம்பு மகன் ஜெயசீலன், திசையன்விளையைச் சேர்ந்த கொம்பையா ஆகிய 2 பேரும் சேர்ந்து பேபி அலீஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஜெயசீலன், கொம்பையா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாசரேத் வாழையடி பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக, நாசரேத் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவில் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கேசுவரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 37 மூட்டைகளில் மொத்தம் 520 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.
போலீசாரின் விசாரணையில், நாசரேத் மோசஸ் தெருவைச் சேர்ந்த சுயம்பு மகன் ஜெயசீலன், திசையன்விளையைச் சேர்ந்த கொம்பையா ஆகிய 2 பேரும் சேர்ந்து பேபி அலீஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஜெயசீலன், கொம்பையா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X