search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நல்லம்பள்ளி அருகே 150 நாட்கள் வேலை வழங்க கோரி அமைச்சரிடம் பெண்கள் மனு

    நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் 150 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினர்.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி அடுத்த லளிகம் கிராம ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட திறப்பு விழா் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு, சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார். இதைதொடர்ந்து மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். 

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் 150 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினர். இது தொடர்பாக மத்திய-மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
    Next Story
    ×