என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்
Byமாலை மலர்21 Dec 2020 4:40 AM GMT (Updated: 21 Dec 2020 4:40 AM GMT)
நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
நெல்லை:
மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோவில்களுக்கு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஆண்டு தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு சிறப்பு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று வந்தது.
இந்த பஸ் தொடக்க நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சரவணன், சசிகுமார் ஆகியோர் பக்தர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வழிஅனுப்பி வைத்தனர்.
இதேபோல் வருகிற 27-ந் தேதி, அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி, 10-ந் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லை ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோவில்களுக்கு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஆண்டு தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு சிறப்பு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று வந்தது.
இந்த பஸ் தொடக்க நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சரவணன், சசிகுமார் ஆகியோர் பக்தர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வழிஅனுப்பி வைத்தனர்.
இதேபோல் வருகிற 27-ந் தேதி, அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி, 10-ந் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லை ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X