என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
234 தொகுதிகளிலும் தி.மு.க.வை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள்- பொன்.ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்21 Dec 2020 2:10 AM GMT (Updated: 21 Dec 2020 2:10 AM GMT)
234 தொகுதிகளிலும் தி.மு.க.வை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நெல்லை:
பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் நேற்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
நாட்டின் முதுகெலும்பாக விளங்கி வரும் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்தும் வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டும். கிராமங்கள், விவசாய குடும்பங்கள் முன்னேற்றம் மட்டுமே நாட்டின் வளத்தை உயர்த்தும். இந்த அடிப்படையில் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஆனால் இந்த சட்டத்தை தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன? வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம். அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற நோக்கில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ள தி.மு.க.வை 234 தொகுதிகளிலும் வாக்காளர்கள் நிராகரிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X