search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பரிசு தொகையை அறிவிப்பதா? - திருமாவளவன் கண்டனம்

    தேர்தல் பிரசாரத்தின் போது பொங்கல் பரிசு தொகை பற்றிய அறிவிப்பை சொல்வது முறையா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஒரு முதலமைச்சராக செய்யவேண்டிய அறிவிப்பை ஒரு கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் சொல்வது முறையா?

    இது அப்பட்டமான விதிமீறலாகும். மக்களுக்கான நலத்திட்டமா அல்லது வாக்குகளுக்காக வழங்கப்படும் முன் பணமா? என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. 

    புயல் வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரமும், மற்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×