என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கியில் கடன் வாங்கி ரூ.3¼ கோடி மோசடி- சென்னையில் மீன் வியாபாரி, மனைவியுடன் கைது
Byமாலை மலர்19 Dec 2020 2:16 AM GMT (Updated: 19 Dec 2020 2:16 AM GMT)
வங்கியில் கடன் வாங்கி ரூ.3¼ கோடி மோசடி செய்ததாக சென்னையில் மீன் வியாபாரி அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை:
சென்னை அண்ணாசாலை, சவுத் இந்தியன் வங்கி கிளையின் முதன்மை மேலாளர் ஜலாலூதீன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிளாட்சன் (வயது 52). இவர் மீன் மொத்த வியாபாரம் செய்கிறார். தனது தொழில் அபிவிருத்திக்காக எங்கள் வங்கியில், ரூ.3.25 கோடி கடன் பெற்றார். இவர் ஏற்கனவே சென்னை அடையாறு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.2 கோடி கடன் பெற்று, அந்த கடனை எங்கள் வங்கிக்கு மாற்றி, கூடுதலாக ரூ.1.25 கோடி கடன் பெற்றார். மொத்தம் அவர் வாங்கிய ரூ.3.25 கோடி கடனையும் திருப்பி செலுத்தவில்லை. மேலும் அவர் கடன் பெறுவதற்கு கொடுத்த சொத்து ஆவணங்கள் போலியானது என்பதை கண்டுபிடித்து விட்டோம்.
அடையாறு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கொடுத்த சொத்து ஆவணங்களும் போலியானவைதான் என்று தெரிய வந்துள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் ரூ.3.25 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட கிளாட்சன், அவரது மனைவி ஜெயசீலி (49) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மீன்வியாபாரி கிளாட்சன், அவரது மனைவி ஜெயசீலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணாசாலை, சவுத் இந்தியன் வங்கி கிளையின் முதன்மை மேலாளர் ஜலாலூதீன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிளாட்சன் (வயது 52). இவர் மீன் மொத்த வியாபாரம் செய்கிறார். தனது தொழில் அபிவிருத்திக்காக எங்கள் வங்கியில், ரூ.3.25 கோடி கடன் பெற்றார். இவர் ஏற்கனவே சென்னை அடையாறு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.2 கோடி கடன் பெற்று, அந்த கடனை எங்கள் வங்கிக்கு மாற்றி, கூடுதலாக ரூ.1.25 கோடி கடன் பெற்றார். மொத்தம் அவர் வாங்கிய ரூ.3.25 கோடி கடனையும் திருப்பி செலுத்தவில்லை. மேலும் அவர் கடன் பெறுவதற்கு கொடுத்த சொத்து ஆவணங்கள் போலியானது என்பதை கண்டுபிடித்து விட்டோம்.
அடையாறு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கொடுத்த சொத்து ஆவணங்களும் போலியானவைதான் என்று தெரிய வந்துள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் ரூ.3.25 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட கிளாட்சன், அவரது மனைவி ஜெயசீலி (49) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மீன்வியாபாரி கிளாட்சன், அவரது மனைவி ஜெயசீலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X